Sri Ranga Pankajam

"Be Divine Do Divinely"

Home
Site Map
Srirangam
Event Today!
Gallery
பேசும் அரங்கம்
அடிமையின் அர்ப்பணம்
Gopurapatti
Mantras & Articles
Archives
Movies
Related Links
Contact Us
Energizers
About Us
//sri://
  
 
பேசும் அரங்கம்...
(Compiled by Muralibattar muralibattar@gmail.com)
 
 
 ஈனச்சொல் ஆயினுமாக ஏறிதிரைவையம்முற்றும்
ஏனத்துருவாய் இடந்த பிரான் - இருங்கர்பகம் சேர்
வானதவர்க்கும் அல்லாதவர்க்கும்  மற்றெல்லா எவர்க்கும்
ஞானப்பிரானை அல்லாலில்லை  நான் கண்ட நல்லதுவே
 
ஸ்ரீபாஞ்சராத்ரம் - 28
03-03-2010
 
ஸ்ரீ பாரமேஸ்வர ஸம்ஹிதை
மூன்றாம் அத்யாயம்
ஸமாதிவ்யாக்யானம்
 
 
திருபள்ளியெழுச்சி
 
ஒரு அர்ச்சகர் கோவிலே இல்லாத ஒரு இடத்திற்குச் செல்ல நேரிட்டால்.....
 
அந்த அர்ச்சகர் சுத்தமான ஒரு பிரதேசத்திற்குச் செல்ல வேண்டும்.  மூல மந்திரத்தினைச் சொல்லியவண்ணம் அங்கு மனதினால் ஒரு கோவிலைக் கற்பனைச் செய்ய வேண்டும்.
 
மூல மந்திரத்தினைச் சொல்லி, கோடி சூர்ய பிரகாசமாயுள்ள எம்பெருமானை அங்கேத் தியானிக்க வேண்டும்.
 
அந்த எம்பெருமானின் ஹ்ருதயமாக “ஹ்ருண் மந்த்ரம்“
பிரும்ம நாடியாக “சிகோ மந்த்ரம்”
எம்பெருமானது க்ரியா சக்தி “கவச மந்த்ரம்“
இந்த மானஸீகக் கோவிலின் திருக்கதவுகள் மற்றும் ஜன்னல்கள் “நேத்ர மந்த்ரம்”
கர்ப்பகிரஹத்தில் ஆயிரம் அக்னிப் பொறிகள் சூழ்ந்து ஒளிமயமாகவும், அனைத்து விக்னங்களையும் போக்கக்கூடிய ஜோதியாக “ அஸ்த்ர மந்த்ரம்”  --
ஆகிய இந்த மந்திரங்களைச் சொல்லி மேற்கூறிய ஸ்தானங்களைத் தியானிக்க வேண்டும்.
 
இந்த மானஸீக கோவிலின் த்வாரத்தினை (கர்ப்பக்கிரஹ நுழைவு வாயில்) மூன்றாக பிரித்து அதன் நடுபாகத்தினை மீண்டும் இரண்டாக பிரித்து, பின்பு இந்த இரண்டுபாகத்தின், இடது பாகத்தில் மெதுவாக வலதுகாலை முன்வைத்து நுழைய வேண்டும்.
 
பூமியினை கொஞ்சமாக பறித்து, எம்பெருமானையும், ஆச்சார்யனையும் மனதினால் வணங்கி அவர்களுடைய ஆக்ஞையினை சிரமேற்கொண்டு, தமக்கு விரும்பிய பலனை மனதினால் எண்ணி, அதனை அங்குள்ள எம்பெருமானிடத்துத் தெரிவி்க்கவேண்டும்.  பின்பு அந்த குழி பறித்துள்ள இடத்தின் நடுவில் நாம் தியானித்து கற்பனைச் செய்த எம்பெருமானின் விக்ரஹத்தினை மனதினால் அங்கு பொருத்தி, தர்பத்தினால் அந்த இடத்தினைத் துடைக்கவேண்டும்.
 
நிறைய தீர்த்தத்தினைச் சேர்த்து, கோமயத்தினால் அந்த மூலஸ்தானத்தினை சுத்தம் செய்து, பஞ்சகவ்யம், சந்தனம், தீர்த்தம் இவைகளை அஸ்த்ர மந்திரம் சொல்லி, அவ்விடத்தில் ப்ரோக்ஷணம் செய்யவேண்டும்.
 
குங்குமம், அகில், பச்சைக்கற்பூரம் ஆகிய கலவைக் கொண்டு மொழுக வேண்டும்.
 
தர்ப்பங்கள், அருகம்புல்,  அக்ஷதை ஆகியவற்றை அவ்விடத்தில் தூவவேண்டும்.
 
இவ்விதமாக கர்ப்பகிரஹத்தினை சுத்தம் செய்து பின்பு மௌனியாக எம்பெருமானுக்கு முன்பே அல்லது வலதுபுறமான இருந்து, வழக்கம் போல் ஆராதனம் செய்யவேண்டும்.
 
சரி..!  எப்போதும் கோமயம் (பசுவினுடைய சாணம்) எப்படி எடுக்கவேண்டும்..?
 
புதிதாக இடப்பட்ட சாணமாகயிருக்க வேண்டும்.
கொழகொழவென்றோ,  புழுக்கள் உள்ளதாகவோ இருக்கக்கூடாது.
 
 
 
  
                                                                                                          .....தொடரும்..
 
Pls click <here> for this previous chapters