sri:
க்ரியா கைரவ சந்திரிகா - ஆகம நூல் வெளீயிட்டு விழா
07.02.2010 - ஞாயிற்றுக் கிழமை
நேற்றைய தினம் தேரெழுந்தூர் ஸ்ரீ உ. வே.கண்ணன் பட்டாச்சாரியார் அவர்களின் 91 வயது பூர்த்தியினை கொண்டாடும் விதமாக 'க்ரியா கைரவ சந்திரிகா' - என்னும் ஒரு பழமையான ஆகம நூல், புத்தொளிப்பெற்று - புதுப்பிக்கப்பெற்று, அதன் வெளீயிட்டு விழா நடைபெற்றது. ஒரு தலைச்சிறந்த ஆகம வித்வானின் பிறந்த நாள், அர்ச்சக பாரம்பரியம் சிறப்புறும் வண்ணம், அவர்தம் புதல்வர்களால் புதுமையாக கொண்டாடப்பெற்றது. இந்த புதினத்தினை வெளிக்கொணர்ந்தவர் அவரது குமாரரும் எனது அருமை நண்பருமான திரு. தேரெழுந்தூர் இராமன் பட்டர் ஆவார். இந்த விழா
அமுதனின் அருள்பொங்கும், தமிழ்மறை தோன்ற காரணமாயிருந்த குடந்தையில் பெரியகடைவீதியிலுள்ள கூரத்தாழ்வான் ஸந்நிதியில் கொண்டாடப்பட்டது.
இந்த விழாவிற்கு நான் செல்லும்போது, திரு. கண்ணன் பட்டாச்சாரியாரைச் சிறப்பித்தும், இந்த நூல் வெளிவரக் காரணமாயிருந்த அவர் குமாரர் திரு. இராமன் பட்டரை போற்றியும், இந்த நூல் வெளீயிட்டு விழா அமையும் என்று எண்ணிய வண்ணம் அங்கு சென்றேன்.
ஆச்சரியமான அனுபவித்தினை அனுபவித்தேன்..! ஒருவர் கூட திரு. கண்ணன் பட்டரையோ, திரு. இராமன் பட்டரையோ புகழவோ அல்லது போற்றவோ இல்லை.
இந்த விழா பாஞ்சராத்ரத்திற்கு ஏற்பட்ட ஒரு ஏற்றம்..! எழுச்சி..! போற்றுதல்..! விழிப்புணர்வு..! அப்பப்பா..! விவரிக்க முடியவில்லை..! ஒவ்வொருவரும் தம்முடைய பாஞ்சராத்ர ஞானத்தினை பகிர்ந்துகொண்டு உரையாற்றிய போது வியந்து அயர்ந்து போனேன்..! குறிப்பெடுக்க எந்த சாதனமும் செல்லாமல் சென்ற தவறுணர்ந்து வருந்தினேன்..! அர்ச்சகர்களுக்குள் இவ்வளவு கருத்தாழம் நான் இது வரை கண்டதில்லை..! அவர்கள் பெரும்பாலும் கருவறையிலேயே முடங்கி கிடந்தவர்கள்..!
இன்று தம் ஞானத்தினை, பாஞ்சராத்திரத்தின் பெருமையினை முழக்கித் தீர்த்தனர்..!
பேசத் தெரியாது என்று தெரிவித்து அருமையான ஒரு பாஞ்சராத்ர ப்ரபாவத்தினை ப்ரவாகமாகக் கொட்டித் தீர்த்தனர். சுமார் மூன்றரை மணி நேரம்.. சென்றதே தெரியவில்லை..!
என் சாஷ்டாங்கமான வணக்கத்தினை திரு கண்ணன் பட்டர் அவர்கள் குடும்பத்தினர்க்கு தெரிவித்துக்கொண்டு, என்னால் முடிந்தவரை நான் கேட்டறிந்த இந்த முழக்கத்தினை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன் இனிவரும் தொடர்தனில்....
..
Thai Velli at Mannargudi & Vaduvur
THIRUPPUTKUZHI VIJAYARAGHAVA PERUMAL BRIMHA UTSAVA PATHIRIGAI - 2010
Sri KoorathAzhwAn's (Kuresa) 1000th Thirunakshtram
at Srirangam (3.2.2009)
For pictures of Vaikunta Ekadasi at Srirangam, this year pls click here
==========================================================
”திருக்கையிலே பிடித்த திவ்யாயுதங்களும், வைத்தஞ்சல் என்ற கையும்,
கவித்த முடியும்,
முகமும் முறுவலும்,
ஆஸநபத்மத்திலேயழுத்தின திருவடிகளுமாய் நிற்கிற நிலையே நமக்கு தஞ்சம்”
-(முமுக்ஷுப்படி-142).